Daily Current Affairs 13 June 2021

  • 0

Daily Current Affairs 13 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 13

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • ஜி7 உச்சி மாநாட்டில் ஜீன் 12, 13 ல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி முறையில் பங்கேற்கிறார்.
    • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார்.
    • ஜி7 நாடுகள் அமைப்புக்கு தற்போது பிரிட்டன் தலைமையேற்றுள்ளது.
    • இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளை விருந்தினர்களாக ஜி7 உச்சி மாநாட்டுக்கு பிரிட்டன் பிரதமர் அழைத்துள்ளார்.
    • நேரடி மற்றும் காணொலி முறைகளில் மாநாடு நடைபெறும்.
    • ‘சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைப்போம்’ என்பது இந்த உச்சி மாநாட்டின் மையப்பொருளாகும்.
      .

  • கழிவுநீரில் கரோனா தீநுண்மி இருப்பதைக் கண்டறியும் குறைந்த விலையிலான சென்ஸார் தொழில்நுட்பத்தை பிரிட்டன் – இந்திய விஞ்ஞானிகள் கூட்டாக உருவாக்கியுள்ளனர்.
    • இதனைப் பயன்படுத்த ஆய்வக வசதிகளோ, விலை உயர்ந்த ரசாயானமோ இதற்கு தேவைப்படாது.
      எளிதாக கையில் எடுத்துச் செல்லக் கூடிய வகையிலான இந்த தொழில் நுட்பம், குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு நோய் தொற்று பரவலைக் கண்டறிய இந்த தொழில்நுட்பம் உதவும்.
    • பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டிராத்கிளைட் பல்கலைக்கழகம் மற்றும் மும்பை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உருவாக்கிய இந்த சென்ஸார் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுக் கட்டுரை சென்ஸார்ஸ் அண்ட் ஆக்சுலேட்டர்ஸ் பி கெமிக்கல்” ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
    • இந்த ஆய்வுக்காக மும்பையிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து கழிவுநீர் சேகரிக்கப்பட்டு அதனுடன் சார்ஸ் சி ஓவி-2 ரிபோநியூக்ளிக் அமிலத்தை கலந்து இந்த சென்ஸார் தொழில்நுட்பத்தை பரிசோதித்துள்ளனர்.

  • தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப சீனா தயாராகி வருகிறது. வீரர்கள் அனுப்பபடவுள்ள ராக்கெட் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்ட்டது.
    • சீன விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரர்கள் அனுப்பப்படவுள்ளனர்.
    • இவர்கள் விண்வெளி நிலையத்தில் 3 மாதங்கள் தங்கியிருந்து கட்டமைப்பு, பராமரிப்புப்பணி மற்றும் அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபடுவார்கள்.
    • சீனா தனக்கு என சொந்தமாக தியான்ஹே விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.
    • இந்நிலையில் 3 விண்வெளி வீரர்கள் செல்லவுள்ள சென்ஷோ-12 விண்கலத்தை ஏற்றிக்கொண்டு செல்லும் லாங் மார்ச்-2 எஃப் ஒய்12 ராக்கெட் வடமேற்கு சீனாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக சீன விண்வெளி பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
    • அந்த ராக்கெட் ஜீன்-16ம் தேதி ஏவRead More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 12 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 12

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் அங்கீகரித்துள்ளது.
    • இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் நாடு எல் சால்வடார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
    • எல் சால்வடாரின் பொருளாதாரம் அந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தை பெரும்பான்மையாக சார்ந்துள்ளது.
    • இத்தகைய அங்கீகாரத்தை பிட்காயின் பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.

  • அந்தமான் கடல்பகுதியில் இந்தியா – தாய்லாந்து கடற்படைகளின் 3 நாள் கூட்டு ரோந்து நடவடிக்கை ஜீன் -9ல் தொடங்கியது.
    • இந்திய கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில் பிராந்திய கடல் பகுதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து க்வாட் கூட்டமைப்பை உருவாக்கி இந்தியப் பெருங்கடல் பகுதியில் கூட்டுப்போர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
    • அதன் ஒரு பகுதியாக, சாகர் திட்டத்தின் கீழ் தாய்லாந்து நாட்டு கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்து பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

  • க்யூஎஸ் (Quacquarelli Symonds) உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களில் 3 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.
    • க்யூஎஸ் உலக பல்கலைக் கழக தர வரிசைப் பட்டியல் 2022 ல், 3 இந்திய பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.ஆராய்ச்சி பிரிவில், உலகளவில் முதலாவது இடத்தில் பெங்களுர் ஐஐஎஸ்சி உள்ளது.
    • மும்பை ஐஐடி 117வது இடத்தையும், டெல்லி ஐஐடி 185வது இடத்தையும், பிடித்துள்ளன.உலகளவில் உயர்கல்வி குறித்து க்யூஎஸ் (குவாக்கரெல்லி சைமண்டஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டுRead More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 11 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 11

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • ஐ.நா சமூக பொருளாதார கவுன்சிலின் உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
    • ஐ.நாவின் 6 முக்கிய அமைப்புகளில் சமூக-பொருளாதார கவுன்சிலும் ஒன்றாக உள்ளது.
    • சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.
    • சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளையும் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.
    • சமூக பொருளாதார கவுன்சிலில் 54 நாடுகள் உறுப்பினர்களாக இடம் பெற முடியும்.
    • ஆசிய கண்டத்திலிருந்து 11 நாடுகளும், ஆப்ரிக்க கண்டத்திலிருந்து 14 நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய பகுதிகளிலிருந்து 6 நாடுகளும் தென் அமெரிக்க கண்டத்திலிருந்து 10 நாடுகளும், மற்ற பகுதிகளில் இருந்து 13 நாடுகளும் கவுன்சிலின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படும்.
    • ஐ.நா சமூக – பொருளாதார கவுன்சிலுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் ஆசியகண்டத்தில் இருந்து இந்தியா, ஆப்கானிஸ்தான், ஓமன், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
    • ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. அதன் தலைமை பொறுப்பை ஆகஸ்ட் மாதம் இந்தியா ஏற்கும்.
    • ஐ.நாவுக்கான இந்திய தூதர் – டி.எஸ்.திருமூர்த்தி

  • ஐ.நா பொதுச்செயலர் பதவிக்காக அன்டோனியோ குட்டெரெஸ் பெயரை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரைத்தது.
    • தற்போது ஐ.நா பொதுச் செயலராக இருக்கும் குட்டெரெஸ் 2வது முறையாக அந்த பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
    • 15 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் ஜீன் 8 ல் நடைபெற்றது. அதில் ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்காக குட்டெரெஸ் பெயரை பரிந்துரைக்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது அடுத்து இந்த தீர்மானம் ஐ.நா பொது சபையில் சமர்ப்பிக்கப்படும்.
    • ஐ.நா பொதுச் செயலர் நியமனமானது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரையின் பேரில் ஐ.நா பொதுச்சபையால் மேற்கொள்ளப்படுகிறது.
    • ஐ.நாவின் 9வது பொதுச் செயலராக இருக்கும் அன்டோனியோ குட்டெரெஸ் 2017 ஜனவரி 1 முதல் 5 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வருகிறார்.
    • அவரது பதவிக்காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.

  • இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து எதிர்க் கட்சிகள் புதிய அரசை அமைப்பதற்கு நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கான வாக்கெடுப்பு ஜீன் 14 ல் நடைபெற உள்ளது.
    • நெதன்யாகுவின் கூட்டாளியான நாடாளுமன்ற அவைத் தலைவர் யாரிவ் லெவின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
    • இஸ்ரேலில் 1996-99 வரை பிரதமராக பதவி வகித்த நெதன்யாகு 2009 ம் ஆண்டு முதல் தொடர்ந்து பிரதமராக பதவிவகித்துRead More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 10 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 10

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • ஐசிஐசிஐ வங்கி ‘ஸ்விஃப்ட் ஜிபிஐ இன்ஸ்டன்ட்’ வசதியை வழங்குவதில் ஆசியா-பசிபிக் பகுதியில் 1வது இடமும், உலகளவில் 2 வது இடமும் பிடித்துள்ளது.
    • ‘ஸ்விஃப்ட் ஜிபிஐ இன்ஸ்டன்ட்’ மூலம் அனுப்பப்படும் 2 லட்சம் வரை தனிப்பட்ட முறையில் பணம் அனுப்படுவது உடனடியாக செயல்படுத்தப்பட்டு IMPS நெட்வொர்க் வழியாக இந்தியாவில் உள்ள எந்தவொரு வங்கியிலும் பயனாளி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
    • 24 x 7 எல்லா நேரங்களிலும் 365 நாட்கள் இந்த சேவை கிடைக்கும்.
    • இந்தியாவுக்கு உடனடி பணம் அனுப்ப குடியிருப்பாளர்கள் தங்கள் வங்கியை வெளிநாடுகளுக்கு சென்று ‘ஸ்விஃப்ட் ஜிபி இன்ஸ்டண்ட்’ மூலம் பணம் அனுப்பும் பரிவர்த்தனையை தொடங்கலாம். இதனால் இந்தியாவிலுள்ள ஐசிஐசிஐ வங்கியால் பயனாளிக்கு உடனடியாக பணம் அனுப்பப்படும்.
    • ICICI வங்கி MD & CEO சந்தீப் பக்ஷி

  • ராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியுள்ளது.
    • அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்ததையடுத்து குறிப்பிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ராணுவ கட்டமைப்புகளை மற்ற நாடுகளின் விமானங்கள் கண்காணிக்கும் வகையில் சர்வதேச ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கடந்த 2002 ம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
    • இதுவரை 1500 க்கும் மேற்பட்ட விமானங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள ராணுவக் கட்டமைப்புகளைக் கண்காணித்துள்ளன.

  • ரஷியாவின் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை பயன்படுத்தும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 2வது நாடாக ஸ்லோவாகியா உள்ளது.
    • முன்னதாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ஐரோப்பிய யூனியனின் மற்றொரு நாடான ஹங்கேரி முதல்முறையாக பயன்படுத்தியது.
      ஐரோப்பிய யூனியனின் மருத்துவக்குழு ஸ்புட்னிக்-வி இதுவரை முறைப்படி அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • ரஷியாவிடம் இருந்து 20 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய ஸ்லோவாகியா ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டது.
    • இதுவரை 5000 பேர் மட்டுமே இருமுறை ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர்.
      ஸ்லோவாகியாவில் மக்கள்தொகை சுமார் 54 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
    • அந்நாட்டில் ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஸெனகா ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை ஐரோப்பிய யூனியன் மருத்துவக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டRead More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 09 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 09

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • புவியியல் பேரிடர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் படி இந்தோனேசியாவின் மெராபி எரிமலை 4 முறை வெடித்தது. எரிமலை பள்ளத்திலிருந்து 1500 மீட்டர் வரை பரவியது.
    • மெராபி இந்தோனேசியாவின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலையாக கருதப்படுகிறது.

current affairs tamil

  • தங்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட சைனாவாக் நிறுவன கரோனாவாக் தடுப்பூசிகளை 3 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு செலுத்த சீனா அனுமதி அளித்துள்ளது.
    • கரோனாவாக் தடுப்பூசிகளை 3 முதல் 17 வயது வரை கொண்ட சிறுவர்களுக்கு அவசர காலங்களில் செலுத்த மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அமைதி அளித்துள்ளது.
    • சைனாவாக் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு ஜீன் 1 ம் தேதி அங்கீகரித்தது.

tnpsc current affairs

  • ஐ.நாவின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா 117 வது இடத்தை பிடித்துள்ளது.
    • வறுமையை ஒழித்தல்இ பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 17 இலக்குகளை 2030 ம் ஆண்டுக்குள் அடைவதற்கான ஒப்பந்தத்தில் 2015 ம் ஆண்டில் ஐ.நாவின் 193 நாடுகளும் கையெழுத்திட்டன.
    • இலக்குகளை அடைவதற்காக ஒவ்வொரு நாடும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை கண்காணித்து அந்நாடுகளை யாலே பல்கலைகழகம் வரிசைப்படுத்தி வருகிறது.
    • 2021 ம் ஆண்டுக்கான அறிக்கையை சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி யாலே பல்கலைகலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
    • அந்த அறிக்கையில் இந்தியா 117 வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா 2 இடங்கள் சரிவைRead More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 08 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 08

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • இது வரை இல்லாத வகையில் 2020ம் ஆண்டில் ஜப்பான் நாட்டில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கடுமையாக குறைந்துள்ளது.
    • ஜப்பான் ஏற்கனவே மக்கள் தொகை வளர்ச்சியில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிவடைந்திருப்பது, நாட்டில் வயதானவர்களின் விகிதம் அதிகரிப்பதும், வேலை செய்யும் மனித வளம் குறைவதும் அடுத்து வரும் ஆண்டுகளில் ஜப்பான் சந்திக்க வேண்டியிருக்கும்.
    • 2020 ம் ஆண்டில் 8,40,832 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.
    • இது முந்தைய ஆண்டை காட்டிலும் 2.8மூ குறைவாகும்.
    • இது 1899 க்கு பின் பதிவாகும் மிக குறைவான வாக்கு பதிவாகும்.

  • தொடர்ச்சியாக 3வது ஆண்டாக உலகளாவிய நிதி கவர்ச்சி தரவரிசையில் பஹ்ரைன் முதலிடத்தில் உள்ளது.
    • உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட AIRINC Global 150 நகரங்களின் குறியீட்டுநிதி கவர்ச்சி தர வரிசையில் 3வது ஆண்டாக பஹ்ரைன் முதலிடத்தைப் பிடித்தது.
    • புதுதில்லி மற்றும் மும்பையின் இந்திய நகரங்கள் மட்டுமே குறியீட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன.
    • மெனா (மத்திய கிழக்கு வட ஆப்ரிக்கா) பிராந்தியத்தை சேர்ந்த 7 நகரங்கள் முதல் 16 இடங்களில் இருந்தன.
    • ஹைட்ரோகார்பன்களிலிருந்து விலகி பொருளாதார பல்வகைப்படுத்துதல் மூலோபாயத்தை உருவாக்கிய பிராந்தியத்தில் முதன்முதலில் பஹ்ரைன் அரசு ஒன்றாகும்.

  • டென்மார்க் பாராளுமன்றம் ஒரு செயற்கை தீவுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
    கோபன்ஹேகன் துறைமுகத்தை கடல் மட்டத்திலிருந்து உயர்த்துவதற்காக ஒரு செயற்கைத் தீவை கட்டும் திட்டத்திற்கு டென்மார்க்கின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

    • டென்மார்க் தீவுக்கு லினெட்டெஹோம் என்று பெயரிட்டது.
    • இங்கு சுமார் 35000 பேருக்கு தங்குமிடம் உள்ளது.
      ரிங்சாலைகள், சுரங்கப்பாதைகள் மற்றும் மெட்ரோ பாதைகள் மூலம் பரந்த தீவை டென்மார்க்கின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்க அரசாங்கம்
      Read More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 07 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 07

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

  • கரோனா தொற்று காலத்தில் தேசிய உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தனியார் டிவி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
    • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் உதவி எண் – 1075
    • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவி எண் – 1098
    • சமூக நீதித்துறையின் மூத்த குடிமக்களுக்கான உதவி எண் – 14567
    • நிம்ஹன்ஸ் அமைப்பின் உளவியல் ஆதரவு உதவி எண் – 08046110007
    • ஆயுஷ் கோவிட் -19 கவுன்சிலிங் உதவி எண் – 14443
    • மைகவ் வாட்ஸ்அப் எண் – 9013151515
    • மத்திய அரசின் இந்த உதவி எண்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி தனியார் பொழுதுபோக்கு டிவி சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

  • பிஹாரில் பொறியியல், மருத்துவ கல்வியில் பெண்களுக்கு 33.3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
    • பீகாரில் 38 அரசு பொறியியல் கல்லூரிகளும், 17 தனியார் பொறியியல் கல்லூரிகளும் செயல்படுகின்றன.
      18 மருத்துவ கல்லூரிகள் செயல்படுகின்றன.

    • கரோனா தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
      சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
      மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீடு செய்வது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விபின் குமார் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
      இந்தக்குழு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக 10 நாள்களுக்கும் அறிக்கை வழங்கும் என சிபிஎஸ்இ
      Read More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 06 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 06

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.
    • சோதனை ஓட்டமாக ஸ்புட்னிக் தயாரிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் சீரம் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
    • தற்போது டாக்டர் ரெட்டி நிறுவனம் ரஷிய நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக்வி தடுப்பூசியை தயாரித்து வருகிறது.
    • இதுவரை 250 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளது.

  • வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய 2 முக்கிய திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
    • பூமிக்கு மிக அருகில் இருக்கும் கோள்களில் ஒன்றான வெள்ளி கிரகத்தின் தட்பவெப்பம் மற்றும் புவியியல் தன்மையை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.
    • நாசாவின் கண்டுபிடிப்பு திட்டத்தின் கீழ் வரும் 2028 முதல் 2030-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3650 கோடி) செலவில் இந்த இரு திட்டங்களையும் மேற்கொள்ள நாசா முடிவு செய்துள்ளது.
    • இந்த திட்டங்களுக்கு டாவின்சி, வெரிட்டாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
    • இந்த திட்டத்தின் மூலம் வெள்ளி கிரகம் எப்படி தோன்றியது? அங்கு கடல் இருந்ததா? கிரகத்தின்
    • புவியியல் வரலாறு குறித்தெல்லாம் டாவின்சி திட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
    • வெள்ளி கிரகத்தின் புவியியல் வளர்ச்சியையும், பூமிக்கும் அதற்குமான வேறுபாடுகளையும் வெரிட்டாஸ் திட்டம் ஆராய உள்ளது.
  • ஜீன் 13ல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் சந்திக்கிறார்.
    • ஜி7 உச்சி மாநாடு பிரிட்டனில் ஜீன் 11 முதல் 13 வரை நடைபெறுகிறது.
    • இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
    • இந்நிலையை ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் செல்லும் அமெரிக்க அதிபர் ஜோபைடனை ஜீன் 13ம் தேதி பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் சந்திக்க உள்ளார்.
    • இதனை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
    • அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் ஜோபைடன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பRead More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 05 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 05

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • இஸ்ரேலின் புதிய அதிபராக மூத்த அரசியல்வாதி ஐசக் ஹெர்ஸாக் தேர்வு செய்யப்பட்டார்.
    இஸ்ரேலின் 10வது அதிபராக கடந்த 2014ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வரும் ரூவன் ரிவ்லினின் பதவிக்காலம் ஜீலை 9ம் தேதியுடன் நிறைவடைகிறது.

    • 120 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் அவருக்கு ஆதரவாக 87 எம்.பிக்கள் வாக்களித்தனர்.
      11 வது அதிபராக ஐசக் ஹெர்ஸாக் தேர்வு செய்யப்பட்டார்.
    • ஐசக் ஹெர்ஸாக் முன்னாள் அதிபர் சாயிம் ஹெர்ஸாக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
    • 1983 முதல் 1993 வரை சாயிம் இஸ்ரேலின் அதிபராக பொறுப்பு வகித்துள்ளார்.
    • புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐசக் ஹெர்ஸாக் தொழிலாளர் அமைப்பின் தலைவராக இருந்துள்ளார்.
    • 2005 ஆம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை வீட்டு வசதி, சுற்றுலா, சமூகநலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.
      .

 

  • ஜப்பானுடன் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையில் ஒத்துழைப்புடன் செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் ஜப்பானின் நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுற்றுலா அமைச்சகத்துக்கும் இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
    • இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு கூட்டு பணிக்குழு அமைக்கப்படும்.
    • ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
  • உலக நம்பர் டூ வீராங்கனை நவோமி ஒசாகா பிரெஞ்சு ஓபனிலிருந்து விலகினார்.
    ஜப்பானிய டென்னிஸ் வீரர் நவோமி ஒசாகா மே 31, 2021 அன்று பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து தன்னை விலக்க முடிவு
    Read More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 04 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 04

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • டென்மார்க்கின் முன்னாள் பிரதமர் பவுல் ஸ்க்லூட்டர் காலமானார்.
    • 1929, ஏப்ரல் 3 ம் தேதி டென்மார்க்கின் டோண்டரில் பிறந்தார்.
      இரண்டாம் உலகப் போருக்கு பின் 1982 முதல் 1993 வரை நீண்ட கால டேனிஷ் பிரதமராக பவுல் ஸ்க்லூட்டர் இருந்தார்.
    • 1994 முதல் 1999 வரை ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

current affairs tamil

  • ‘ஹெச் 10 என் 3’ எனப்படும் பறவைக் காய்ச்சல் நோய்த் தொற்று சீனாவில் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது.
    • இந்த வகை தீ நுண்மியால் மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
    • பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் ‘ஹெச்10 என்3’ வகை தீ நுண்மி, சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜென்ஜியாங் நகரில் ஒருவருக்கு தொற்றிருப்பது முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.

 

தேசிய செய்திகள்

tnpsc current affairs

  • உலகின் முதல் நானோ யூரியா திரவம் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • உலகம் முழுவதும் விவசாயிகளுக்கு மே 31, 2021 அன்று இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (இப்கோ) அறிமுகப்படுத்தப்பட்டது.
    • நானோ யூரியா திரவமானது அதன் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு ஒரு தனியுரிம தொழில்நுட்பத்தின் மூலம் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • இது கலோனின் நானோ பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தில் ‘ஆத்மநிர்பார் பாரத்’ மற்றும் ‘ஆத்மனிர்பர் கிருஷி’ ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டது.
    • பயிர்களின் ஊட்டச் சத்துக்களின் செயல்திறனை மேம்படுத்த நானோ தொழில்நுட்பத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் யூரியாவை நானோ யூரியா என்று அழைக்கப்படுகிறது.
    • நானோ யூரியா திரவம் வழக்கமான யூரியாவை மாற்றும். மேலும் அதன் தேவையை 50 சதவிகிதம்Read More…

 

All Month Current Affairs PDF  Here


Quick Enquiry

Quick Enquiry