2019-ம் ஆண்டைக் காட்டிலும் 2020-ல் உலக அளவிலான அந்நிய நேரடி முதலீடு 35 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 2019-ல் 1.5 ட்ரில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 2020-ல் 1 ட்ரில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்தியாவைப் பொறுத்தவரை 2020-ம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 2019-ம்ஆண்டைக் காட்டிலும் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-ல் 51 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 2020-ல் 64 பில்லியன் டாலர் (ரூ.4.74 லட்சம் கோடி) முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா ஈர்த்துள்ள முதலீடு 5-வது பெரிய முதலீடு ஆகும்.
உலகிலேயே முதல் முறையாக சீனாவில் இதுவரை 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 7 கரோனா தடுப்பூசிகளுக்கு சீனா அனுமதி வழங்கியுள்ளது. இதில் இரண்டு கரோனா தடுப்பூசிகள் குழந்தைகளுக்குச் செலுத்தும் தகுதியுடையவை.
இதன் காரணமாக கடந்த 5 நாட்களில் சீனாவில் 10 கோடி கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை 43மூக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சீனாவில் தாமதமாகத்தான் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாகத் தடுப்பூசி செலுத்துவதை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.
சீனாவில் சினோபார்ம், சினோவாக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
தேசிய செய்திகள்
ஐக்கிய நாடுகளின் வர்த்தக மன்றத்தில் நிகழ்ந்த மாநாட்டின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் உரையாற்றிய போது பெரிய நாடுகளின் மத்தியில் இந்தியாவில் தனிநபர் கார்பன் டை ஆக்சைடு மிகவும் குறைவு என கூறினார். 2030 ஆம் ஆண்டுக்குள் 450 மெகாவாட் திறனுடைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை இந்தியா அடைவதில் இலட்சியமாகக் கொண்டு உள்ளது எனக் கூறியுள்ளார்.
மேலும் இம்மாநாட்டில் பங்கேற்ற பல நாடுகள் தங்களின் நிலையான உலகை உருவாக்க வர்த்தகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய பேச்சு வார்த்தைகளைRead More…
ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் ரைசிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.
ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.
அதிபர் பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி போட்டியிட்டார்.
இந்நிலையில், ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் ரைசிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பசுமை ஹைட்ரஜன் முயற்சிகள் குறித்து இந்தியா இரண்டு நாள் உச்சி மாநாட்டை நடத்த உள்ளது. பிரிக்ஸ் நாடுகளை உள்ளடக்கிய உச்சி மாநாடு 2021 ஜீன் 22 அன்று தொடங்கும். இந்த மாநாடு இணைய வாயிலாக நடத்தப்படும். இந்த மாநாட்டில் பசுமை ஹைட்ரஜனின் எதிர்கால பங்களிப்பைப் பற்றி விவாதிக்கப்படும்.
தேசிய செய்திகள்
இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடம்.
2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறியீடு (GER) 50%–ஆக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது மத்திய அரசு. ஆனால், கடந்த ஆண்டிலேயே தமிழ்நாடு 50மூ இலக்கை அடைந்திருப்பது பெருமிதத்துக்குரியது. சமீபத்தில், 2019-2020-ம் ஆண்டுக்கான உயர்கல்வி தொடர்பான அகில இந்திய கணக்கெடுப்பில், நாடு முழுவதும் சராசரியாக 27.1% மாணவர்கள் உயர்கல்விக்குச் சென்றிருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
GER (Gross Enrollment Ratio) – உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறியீடு.
2019-20-ல் GER உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறியீடு பட்டியலில் 51.4 சதவிகிதத்துடன் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 75.8 சதவிகிதத்துடன் சிக்கிம் முதல் இடத்திலும், 52.1 சதவிகிதத்துடன் சண்டிகர் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது, நாட்டின் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடுRead More…
ஜெனீவாவில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு வழங்கிய சிறப்பு பரிசு கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு 23 காரட் தங்க காப்பால் செய்யப்பட்ட கண் கண்ணாடியை பரிசளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பைடன் விரும்பி அணியும் இந்த கண் கண்ணாடி போர் விமானிகளுக்காக மாசூசெட்ஸில் தயாரிக்கப்படும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
பல்வேறு முக்கியத் தலைவர்களுடான சந்திப்பில் அமெரிக்க அதிபர் பைடன் இத்தகைய கண்ணாடியை அணிவது வழக்கம்.
புதினுக்கு நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட கண்ணாடி சிற்ப தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட காட்டெருமை வடிவிலான படிக சிற்பமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் லாம்ப்டா என்ற புதிய வகை உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
‘லாம்ப்டா’ என்ற உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெருவில் கண்டறியப்பட்டது.
இந்த வகையான லாம்ப்டா வைரஸ் 29 அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது.
குறிப்பாக அர்ஜெண்டினா, சிலி போன்ற நாடுகளில் இந்த வகை வைரஸ் பரவியுள்ளது.
உருமாறிய கரோனா வைரஸ்கள், கிரேக்க எழுத்துகளான ஆல்பா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும் போது எளிதாக அடையாளப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு கரோனா வைரஸ்களுக்கு பெயரையும் வெளியிட்டது.
இந்நிலையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸீக்கு லாம்ப்டா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
கடற்கொள்ளை தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய போர்க்கப்பல் ஐஎன்எஸ் த்ரிகண்ட், ஐரோப்பிய யூனியன் நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகியவற்றின் கடற்படையுடன் இணைந்து ஜீன் 18ல் கூட்டு போர்ப் பயிற்சியை தொடங்கியது.
இந்த பயிற்சி ஏடன் வளைகுடா பகுதியில் 2 நாள்கள் நடக்கிறது.
இதில் 4 நாடுகளை சேர்ந்த 5 போர்க் கப்பல்கள் பங்கேற்றுள்ளன.
இத்தாலி கடற்படை கப்பல் ஐடிஎஸ் கராபினெரி, ஸ்பெயின் கடற்படை கப்பல் இ எஸ்பிஎஸ் நவாரா, பிரான்ஸ் கடற்படையின் 2போர் கப்பல்கள், எப்எஸ்டானெரி மற்றும் எப்எஸ்சர்கஃப் ஆகியவை இந்த பயிற்சியில்Read More…
தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை முதல் முறையாக அனுப்பி சீனா சாதனை படைத்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ள சீனா இதுவரை இல்லாத வகையில் 380 கி.மீ தொலைவுக்கு அவர்களை அனுப்பியுள்ளது.
விண்வெளியில் சீனா அமைத்து வரும் தியான்காங் ஆய்வு நிலையத்தின் பிரதானப் பகுதியாக தியான்ஹே ஏப்ரல் 29ல் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆய்வு நிலையத்தை நோக்கி 3 வீரர்களுடன் ஷென்ஷோ விண்வெளி ஓடம் கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
3 வீரர்களும் 3 மாதங்கள் தியான்காங் விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர்.
2019 ல் அதிகம் அறியப்படாத நிலவின் தொலைதூர பக்கத்தில் தனது சாங்கே-4 ஆய்வுகலத்தை சீனா முதல் முறையாக தரையிறக்கியது.
சீனாவின் சாங்கே-5 ஆய்வுக்கலம், நிலவிலிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்து வந்தது.
.
இலங்கையில் சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சுமார் ரூ.740 கோடி கடனை இந்தியா வழங்கியுள்ளது.
2030ம் ஆண்டுக்குள் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 70 சதவீதத்தை மரபு சாரா மூலங்கள் வாயிலாக உற்பத்தி செய்வதற்கு இலங்கை அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்காக இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி, இலங்கை அரசுக்கு சுமார் ரூ.740 கடனுதவி வழங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் ஜீன் 16ல் கையெழுத்தானது.
சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பை இந்தியா முன்னின்று 2018 ல் உருவாக்கியது. அதில் இலங்கையும் உறுப்பு நாடாக உள்ளது.
ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகில் 3வது பெரிய வைரம் கண்டறியப்பட்டுள்ளது.
போட்ஸ்வானா உலகின் வைரங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று.
இந்நிலையில் போட்ஸ்வானாவில் சமீபத்தில் எடை அதிகமுள்ள வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் எடை சுமார் 1098 கேரட் ஆகும். உலகின் கண்டறியப்பட்ட 3வது பெரிய வைரம் இதுவாகும்.
உலகில் 2வது பெரிய வைரமும் போட்ஸ்வானாவில் 2016ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 1109 கேரட் ஆகும்.
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதன் எடை 3106 கேரட் அளவுRead More…
புவி வெப்பமடைவதால் ஆர்க்டிக் பனிப்பாறை உருகும் அபாயம் குறித்து ஏற்கனவே சர்வதேச அளவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் குழுவின் தலைவர் மார்கஸ் ரெக்ஸ் தற்போது பனிப்பாறை உருகத் தொடங்கி விட்டதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோடை காலத்திலும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உருகிய ஐஸ் பாளங்கள் இப்போது மறைத்துள்ளது. பனி உருகுவதன் முதல் அடையாளம் என மார்கஸ் குறிப்பிட்டுள்ளார்.
உலக கொடுப்பனவு குறியீட்டு (World Giving Index) 2021 வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியா, உலகின் 14வது தொண்டு நாடாக உள்ளது.
இந்தோனேசியா முதலிடத்திலுள்ளது.
இந்தோனேசியா ஒட்டு மொத்தமாக 69% குறியீட்டு மதிப்பெண்ணைக் கொண்டுள்ளது.
கென்யா, நைஜீரியா, மியான்மர் மற்றும் ஆஸ்திரேலியா முறையே முதல் 2, 3, 4, 5 ம் இடத்தில் உள்ளன.
தேசிய செய்திகள்
கரோனா முன்களப் பணியாளர்களுக்கான நாடு தழுவிய பயிற்சி வகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஜீன் 18ல் தொடங்கி வைக்கிறார்.
கரோனா தொற்றின் வரும் 3வது அலையை சமாளிக்கவும், 3வது அலை உச்சக்கட்டத்தை அடையாமல் தடுப்பதற்கும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியர்களின் வேலையை கரோனா முன்களப் பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டள்ளது.
பிரதமரின் கவுஷல் விகாஸ் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளர்களுக்கு இந்தப் பயிற்சி
வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 26 மாநிலங்களில் இதற்காக 111 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அடிப்படை பராமரிப்பு உதவி, அவசர கால உதவி கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை பொது மக்களிடம் சேகரிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட 6வகை பயிற்சிகள் இதில் அடங்கும்.
ரூ 276 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தை பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிRead More…
‘விவாடெக்’ அமைப்பின் 5வது தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய டிஜிட்டல், புதுமை கண்டுபிடிப்புகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப மாநாடு விவாடெக் என்ற பெயரில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2016 ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.
5வது மாநாடு ஜீன் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜீன் 16ல் பிரதமர் மோடி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.
ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஸக்கர்பர்க், மைக்ரோ சாஃப்ட் தலைவர் பிராட்ஸ்மித் உள்ளிட்ட தொழில்துறை தலைவர்களும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை தொடர்ந்து அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
எல்லை விவகாரங்களில் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியா பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் சார்பில் அணு ஆயுதங்கள் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் உலகம் முழுவதிலும் சுமார் 13,080 அணு ஆயுதங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அவற்றில் 90% ஆயுதங்கள் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளில் மட்டுமே உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சர்வதேச அளவில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், வடகொரியா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளன.
அணு ஆயுதங்களைக் கொண்ட ஏவகனைகளை தயாரிப்பதற்காக அதிசெறிவூட்டப்பட்ட யுரேனியம் புளுட்டோனியம் ஆகிய கதிரியக்கப் பொருள்களை நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
இந்தியா, இஸ்ரேல் ஆகியவை புளுட்டோனியத்தைக் கொண்டு அணு ஆயுதங்களை தயாரித்து வருகின்றன.
பாகிஸ்தான் யுரேனியத்தை கொண்டு ஆயுதங்கள் தயாரிக்கிறது.
தேசிய செய்திகள்
டாக்டர் ஹர்ஷவர்தன் உலகளாவிய யோகா மாநாடு 2021 ல் உரையாற்றுகிறார்.
உலகளாவிய யோகா மாநாடு 2021ன் தொடக்க விழாவில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஷர்ஷ்வர்தன் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியை “மோக்சயதன் யோக்சன்ஸ்தான்” மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இந்திய அரசு மற்றும் இந்திய கலச்சார உறவுகள் கவுன்சில் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.
அமெரிக்க நிறுவனமான நோவாவாக்ஸ் உருவாக்கி இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி 90.4மூ செயல்திறனை கொண்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, மெக்சிகோவில் உள்ள 119 இடங்களில் 29960 தன்னார்வலர்களுக்கு நோவாவாக்ஸ் உருவாக்கியுள்ள ‘என்விஎக்ஸ் – சிஓவி 2373’ தடுப்பூசியை செலுத்தி அதன் செயல்திறன், பாதுகாப்பு, நோய் எதிர்ப்பாற்றல் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தடுப்பூசியின் ஒட்டு மொத்த செயல்திறன் 90.4மூ என தெரிய வந்துள்ளது.
நோவாவாக்ஸ் உருவாக்கியுள்ள தடுப்பூசியை சாதாரண குளிர்சாதன பெட்டிகளில் சேமிக்க முடியும்.
2022 ல் அமெரிக்காவுக்கு 11 கோடி தடுப்பூசிகளையும், வளரும் நாடுகளுக்கு 110 கோடி தடுப்பூசிகளையும் வழங்க நோவாவாக்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்ய நோவாவாக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஜீன் 15 முதல் இஸ்ரேல் உலகின் முதல் முகமூடி இல்லாத நாடாக மாறும்
முகமூடிகளைப் பயன்படுத்துவதற்கான விதி ஜீன் 15 முதல் முடிவடையும்.
இதை இஸ்ரேலின் சுகாதார அமைச்சர் யூலி எடெல்ஸ்மீன் அறிவித்தார்.
வெளியில் முகமூடிகளை பயன்படுத்துவதற்கான விதி ஏற்கனவே நாட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
9 நாடுகளுக்கு பயணம் செய்வது இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
உத்தரகாண்டில் 14500 அடி உயரத்தில் நந்தா தேவி வனப்பகுதியில் முதல்முறையாக ராணுவ பெண்கள் குழுவினர் ரோந்து சென்று சாதனை படைத்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே நந்தா தேவி வனப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் ராணுவக் குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர்.
ராணுவத்தை சேர்ந்த துர்கா சதி, ரோஷ்னி நெகி, மம்தா கன்வாசி ஆகியோர் அடங்கிய குழு நந்தாதேவி வனப்பகுதியில் சுமார் 14,500 அடி உயரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளது.
நந்தா தேவி சிகரமானது 25 ஆயிரம் அடி உயரம் கொண்டது. இந்த பெண்கள் ராணுவக் குழுவினர் 14,500 அடி உயரம் வரை Read More…
இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றார்.
இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தன.
அந்த கூட்டணி அமைத்துள்ள புதிய அரசுக்கு நாடாளுமன்ற அங்கீகாரம் அளிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நாஃப்டாலி பென்னட் தலைமையிலான புதிய அரசு வெற்றி பெற்றது.
120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன.
இஸ்ரேலின் 13வது பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றார். புதிய அரசில் 27 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 9 பேர் பெண்கள். .
கம்போடியாவில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக புதிய எலிகள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
கம்போடியா நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு பகுதிகளில் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.
இந்த வெடிகளில் சிக்கி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததால் அவற்றை அகற்ற கம்போடியா அரசு முடிவு செய்தது.
இந்த பணியில் விலங்குகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி எலிகளை கொண்டு கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த பணியில் மகாவா என்ற எலி 5 ஆண்டுகளுக்கும் மேலாக சுறுசுறுப்பாக பணியாற்றியது.
கண்ணி வெடிகளை கண்டுபிடிப்பதில் அசாத்திய திறமை கொண்ட இந்த எலி, இதுவரை 71 கண்ணிவெடிகளை கண்டுபிடித்துள்ளது.
இதன் மிகச் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் விதமாக இங்கிலாந்து விலங்குகள் நல அமைப்பு, எலி மகாவாவுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தியது.
அந்த அமைப்பின் 77 ஆண்டுகால வரலாற்றில் எலி ஒன்று தங்கப்பதக்கம் பெறுவது இதுவே முதன்முறை.
தற்போது மகாவா எலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், கண்ணி வெடிகளை அடையாளம் காண புதிய எலிகள் குழு கம்போடியா அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
கண்ணி வெடிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் பயிற்சியை எலிகளுக்கு அபோபா என்ற தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது.
தான்சானியாவை தலைமையிடமாக கொண்ட இந்த அமைப்பு எலிகளுக்கு பயிற்சி வழங்கி, அதில் சிறப்பாக இருக்கும் எலிகளுக்கு ‘ஹீரோ ராட்’ என்ற சான்றிதழையும் வழங்குகிறது.
தற்போது உருவாக்கப்பட்ட புதிய குழுவில் 21 ஆப்ரிக்க வகை பெரிய எலிகள் உள்ளன.
உலகின் மிக நீளமான கடலுக்கடியில் கேபிளை கூகுள் உருவாக்குகிறது.
கூகிள் ஒரு திறந்த சப்ஸீகேபிளை அமைப்பதன் மூலம் அமெரிக்காவை தென் அமெரிக்க நாடுகளுடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்தது.
பிரேசிலின் 1வது கவிஞர் ‘மரியா பிர்மினா டோஸ் ரெய்ஸை’ கௌரவிக்கும் வகையில் ‘ஃபிர்மினா’ என்று சப்ஸீ கேபிள் பெயரிடப்பட்டது.
இது உலகின் மிக நீளமான சப்ஸீ கேபிள் ஆகும். இது ஒரு மின் மூலத்தின் மூலம் முழுமையாக இயங்க கூடியது.
உலகின் மிகப்பெரிய கடலுக்கடியில் உள்ள கேபிளான ஃபிர்மினியா, தென் அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கான கூகிள் சேவைகளுக்கான அணுகலைRead More…
அடுத்த ஆண்டுக்குள் 70% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஜி7 உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜி-7 கூட்டமைப்பின் 47வது உச்சி மாநாடு ஜீன் 11 அன்று தொடங்கியது.
பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஜவ்ஸ் நகரில் உள்ள கார்பில் பே பகுதியில் மாநாடு நடைபெற்று வருகிறது.
இம்மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கலந்து கொண்டார்
‘ஒரு பூமி, ஒரே சுகாதார’ அணுகுமுறையை கடைபிடிக்க ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
.
அமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையை படம் பிடித்த 18 வயது இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியர் புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மினியாபொலிஸ் நகரில் 2020 மே, 25 ல் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்தவரை போலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர்.
டெர்ரக்சவுவின் என்ற போலீஸ்காரர் பிளாய்டை கீழேதள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுதிணறல் ஏற்பட்டு அவர் இறந்தார்.
இதையடுத்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது.
போலீஸ்காரர் டெர்ரக் சவுவின் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண்
ஜார்ஜ் பிளாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய அந்த வீடியோ தான் முக்கிய காரணம்.
புகைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய விருது புலிட்சர் விருது
அமெரிக்கா பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் என்பவரின் பெயரில் 1912 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
சீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளி செய்தியாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் நினைவாக பத்திரிக்கை, நாடகம், இசை உள்ளிட்ட துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கொலம்பியா பல்கலைக் கழகத்தால் புலிட்சர் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான புலிட்சர் பரிசு பட்டியல் வெளியடப்பட்டது. இதில் பொது சேவை பிரிவில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் புலிட்சர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
சர்வதேச செய்தி சேகரிப்பு பிரிவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆன்லைன் செய்தி ஊடகமான டீரணணகநநன சார்பில் சீனாவில் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜ கோபாலன்Read More…
மங்கோலியாவின் முன்னாள் பிரதமர் உக்னா குரெல்சுக் நாட்டின் 6வது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியானார்.
ஆளும் மங்கோலிய மக்கள் கட்சியின் அதிகாரத்தை ஒரு மகத்தான வெற்றியுடன் மேலும் பலப்படுத்தினார்.
தேசிய செய்திகள்
இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவேக்சின் கரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி தர அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மறுத்துள்ளது.
கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை குறித்து கூடுதல் தரவுகளுடன் உயிரி உரிம விண்ணப்ப (பிஎல்ஏ) வழியில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளிவரும் முன்னரே இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.
கோவேக்சின் தடுப்பூசிக்கு எப்டிஏ அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சியை பாரத் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தனது பங்கு நிறுவனமான ஒகுஜன் மூலம் முயற்சி மேற்கொண்டது.
பிஎல்ஏ நடைமுறை என்பது மருந்து அல்லது தடுப்பூசிகளுக்கு அனைத்து விதமான பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் நீண்ட வழிமுறையுடைய அனுமதி நடைமுறையாகும்.
எல்லைச் சாலைகள் அமைப்பின் 2 மையங்களை ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார்.
தில்லியில் எல்லைச் சாலைகள் அமைப்புக்கு(BRO) 2 மையங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காணொலி வழியாகத் திறந்து வைத்தார்.
சாலை விபத்துகளால் ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.
இந்த உயிரிழப்பைத் தடுப்பதற்காக தேசிய சாலைப் பாதுகாப்புக் கொள்கை, மோட்டார் வாகனச் சட்டம் -2020 மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பகுதிகளை கண்டறிதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
தற்போது முக்கிய நடவடிக்கையாக பிஆர்ஓ அமைப்பு சார்பில் இரு மையங்கள்Read More…