டென்மார்க்கின் முன்னாள் பிரதமர் பவுல் ஸ்க்லூட்டர் காலமானார்.
1929, ஏப்ரல் 3 ம் தேதி டென்மார்க்கின் டோண்டரில் பிறந்தார். இரண்டாம் உலகப் போருக்கு பின் 1982 முதல் 1993 வரை நீண்ட கால டேனிஷ் பிரதமராக பவுல் ஸ்க்லூட்டர் இருந்தார்.
1994 முதல் 1999 வரை ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
‘ஹெச் 10 என் 3’ எனப்படும் பறவைக் காய்ச்சல் நோய்த் தொற்று சீனாவில் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகை தீ நுண்மியால் மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் ‘ஹெச்10 என்3’ வகை தீ நுண்மி, சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜென்ஜியாங் நகரில் ஒருவருக்கு தொற்றிருப்பது முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
உலகின் முதல் நானோ யூரியா திரவம் அறிமுகப்படுத்தப்பட்டது.
உலகம் முழுவதும் விவசாயிகளுக்கு மே 31, 2021 அன்று இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (இப்கோ) அறிமுகப்படுத்தப்பட்டது.
நானோ யூரியா திரவமானது அதன் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு ஒரு தனியுரிம தொழில்நுட்பத்தின் மூலம் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது கலோனின் நானோ பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தில் ‘ஆத்மநிர்பார் பாரத்’ மற்றும் ‘ஆத்மனிர்பர் கிருஷி’ ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டது.
பயிர்களின் ஊட்டச் சத்துக்களின் செயல்திறனை மேம்படுத்த நானோ தொழில்நுட்பத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் யூரியாவை நானோ யூரியா என்று அழைக்கப்படுகிறது.
நானோ யூரியா திரவம் வழக்கமான யூரியாவை மாற்றும். மேலும் அதன் தேவையை 50 சதவிகிதம்Read More…
இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617.1 வகை வைரஸீக்கு ‘கப்பா’ என்றும், 2 வதாக கண்டறியப்பட்ட பி.1.617.2 வைரஸீக்கு ‘டெல்டா’ என்றும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
பிரிட்டனில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் பி.1.17 வைரஸை ‘ஆல்ஃபா’ என்றும்
தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட பி.1.351 வைரஸீக்கு ‘பீட்டா’ என்றும்
பிரேசில் கண்டறியப்பட்ட வைரஸீக்கு ‘காமா’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட இரு வைரஸ்களுக்கு ‘கப்பா’ என்றும் ‘டெல்டா’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய பெயர்கள் எளிதாக அடையாளபடுத்தி காட்டும் என்றாலும், இதன் அறிவியல் ரீதியிலான பெயர்கள் மாறாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள சீன அரசு அனுமதி அளித்துள்ளது.
சீனாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவாக மக்கள் தொகை பெருக்க விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
உதாரணமாக 2016 ம் ஆண்டு 1.8 கோடியாக இருந்த குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை 2018 ல் 1.2 கோடியாக குறைந்துள்ளது.
இதனால் ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி அளித்துள்ளது.
தேசிய செய்திகள்
தாக்தே சூறாவளியால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மகாராஷ்டிரா அரசு 2021 மே 27 அன்று ரூ.252 கோடி நிவாரண நிதிக்கு ஒப்புதல் அளித்தது.
மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் வாராந்திர அமைச்சரவையில் நிவாரண நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அரேபிய கடலில் தாக்தே சூறாவளி 2021 மே 17 அன்று இந்தியவானிலை ஆய்வுத் துறையால் ‘மிகக்கடுமையான சூறாவளி புயலாக’ அறிவிக்கப்பட்டது.
சூறாவளி மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகள் வழியாக குஜராத்தில் 2021 மே 17-18 க்கு இடையில் நிலச்சரிவை ஏற்படுRead More…
சீனாவின் ‘தியான்ஹே’ எனப்படும் புதிய விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்கள் ஜீன் மாதம் அனுப்பப்படவுள்ளனர்.
சீன விண்வெளி நிலைய திட்டத்தின் துணை தலைமை வடிவமைப்பாளர் யாங்லிவி இத்தகவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சர்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில் இடம் பெறாத சீனா தனியாக விண்வெளி நிலையம் ஒன்றை கட்டமைத்து வருகிறது.
‘தியான்ஹே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மைய தொகுதியானது ஏப்ரல் 29ம் தேதி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
அந்த நிலையத்துக்கான எரிபொருள் உள்ளிட்ட பொருள்கள், விண்வெளி உடைகள், உணவுப் பொருள்களுடன் ஒரு விண்கலம் அனுப்பப்பட்டு அது விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
இதன் அடுத்தகட்டமாக ‘சென்ஷீ 12’ என்ற விண்கலம் மூலம் ஜியூகுவான் தளத்திலிருந்து 3 விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்துக்கு அடுத்த மாதம் அனுப்பப்படவுள்ளனர்.
70 டன் எடை கொண்டதாக உருவாக்கப்படும் விண்வெளி நிலையத்தை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக கட்டமைக்க சீன விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தை வேகமாக ஏறிய சாதனையை ஹாங்காங்கை சேர்ந்த சாங்யின்-ஹங் முறியடித்தார்.
44 வயதான சாங்யின் ஹங் 8848.86 மீ எவரெஸ்ட் மலையை மே 23 அன்று 25 மணி 50 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் எவரெஸ்டை வென்ற மிக விரைவான பெண் என்ற சாதனையை நேபாளி புன்ஜோ ஜாங்மு லாமா வைத்திருந்தார். 2018 ல் 39 மணி 6 நிமிடங்களில் ஏறுதலை முடித்திருந்தார்.
தேசிய செய்திகள்
விஸ்டாரா நிறுவனம் கொள்முதல் செய்த எரிபொருள் சிக்கனம் மற்றும் அதிக இருக்கை வசதிகள் கொண்ட ஏ-320 நியோ ரக விமானம் இந்தியா வந்து சேர்ந்தது.
சிஎஃப்எம் நிறுவனத்தின் அதிநவீன ‘லீப்’ இயந்திரம் பொருத்தப்பட்ட இந்த விமானம் பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனம் உருவாக்கியதாகும்.
டாடா குழுமம் மற்றம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு நிறுவனமான விஸ்டாராவின் விமான சேவையில் இணையும் 46 வது விமானம் இதுவாகும்.
ஏர்பஸ் ஏ-320 நியோ விமானம் உள்பட 50 விமானங்கள் கொள் முதல் செய்ய பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனத்திடம் விஸ்டாரா நிறுவனம் 2018 ல் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக இந்த ஏர்பஸ் ஏ320 நியோ விமானம் வந்துRead More…
கலைவிமர்சகர், எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான டாக்டர் அல்கா ரகுவன்ஷி நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மே 26 அன்று காலமானார்.
லண்டனின் கோலட்ஸ்மி;த் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டில் உள்ள நவீன கலை அருங்காட்சியகத்தில் பயிற்சி பெற்ற அவர் இந்தியாவின் முதல் பயிற்சி பெற்ற கலைக் கண்காணிப்பாளராக இருந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் பணியாற்றிய ஒரே இந்திய நடுவர் அசோக்குமார்.
தனது 2வது ஒலிம்பிக்கில் பணியாற்றும் அசோக் உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் (United World Wrestling) UWW வெளியிட்ட அதிகாரிகளின் பட்டியலில் இடம் பெற்றார்.
அவர் ஒரு UWW நடுவர்களின் கல்வியாளரும் ஆவார்.
ஆஷ்ரிதா வி ஒலெட்டி இந்தியாவின் முதல் பெண் விமான சோதனை பொறியாளர் ஆவார்.
இந்திய விமானப்படையின் (IAF) ஒரு பெண் அதிகாரி விமானப்படை டெஸ்ட் பைலட் பள்ளியில் பட்டம் பெற்றார். நாட்டின் முதல் பெண் விமான சோதனை பொறியாளராக ஆனார்.
விமான சோதனை பொறியியலாளர் பாத்திரத்திற்கு தகுதி பெற்ற ஒரே பெண் IAF.
விமானப்படை டெஸ்ட் பைலட் பள்ளியிலிருந்து ஓராண்டு படிப்பை முடித்து 43 வது விமான சோதனை பாடத்தின் ஒரு பகுதியாகRead More…
ஒரு டோஸ் தடுப்பூசியான ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை செலுத்துவதற்கான அனுமதியை பிரிட்டன் வழங்கியுள்ளது.
பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் கரோனா தடுப்பூசியை வேகமாக செலுத்தும் பணியை பிரிட்டன் அரசு முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டனில் அஸ்ட்ரா ஜெனகா, பைஸர், மாடர்னா ஆகிய கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுத்த நிலையில், தற்போது ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.
சிரியாவின் அதிபராக பஷார்அல் ஆசாத் 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிரியாவில் மே 26 ல் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் 70% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
இத்தேர்தலில் பசார் ஆசாத்க்கு எதிராக அப்துல்லா சலிம் போட்டியிட்டார். இந்நிலையில் பஷார் அல் ஆசாத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் செயற்குழு கூட்டம் அண்மையில் காணொலி வாயிலாக நடைபெற்றது.
இதில் பிரிக்ஸ் நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் என 60 பேர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இந்திய குழுவுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவின் தலைவர் டாக்டர் சஞ்சீவ் குமார் வர்ஷ்னே தலைமை தாங்கினார்.
பிரிக்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் & புத்தாக்க நடவடிக்கைள் கால அட்டவணை 2020-21 ன் ஒரு பகுதியாக இந்த கூட்டம் நடைபெற்றது.
2021 ஜனவரி முதல் பிரிக்ஸ் அமைப்பிற்கு இந்தியாRead More…
அமேசான் நிறுவனத்தை உருவாக்கியவரும் 27 ஆண்டுகளாக கட்டமைத்தவருமான ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து முறைப்படி விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனம் 1994 ஜீலை 5 ல் நிறுவப்பட்டது.
ஜெஃப் பெசோஸீக்கு பதிலாக 20 ஆண்டுகளாக அவருடன் இணைந்து பணியாற்றிய ஆன்டிஜாஸே புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜீலை 5ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.13 லட்சம் கோடியாகும்.
சீனாவில் 70 வயது வாங்லாங் என்ற பெண் கடந்த 16 ஆண்டுகளில் 100 மராத்தான் போட்டிகளில் ஓடி சாதனை படைத்துள்ளார். இதனால் இவரை ‘சூப்பர் பாட்டி’ என சீனர்கள் அழைக்கிறார்கள்.
2004 ம் ஆண்டு தன்னுடைய முதல் மராத்தான் ஓட்டத்தை ஆரம்பித்தார்.
இதுவரை 100 மாரத்தான் ஓட்டங்களை ஓடி முடித்திருக்கிறார். 2005 முதல் 2017 வரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பெய்ஜிங் மாரத்தான் போட்டியில் 13 முறை ஓடி முடித்திருக்கிறார்.
2021 ல் லியோனிங் பகுதியில் நடைபெற்ற அல்ட்ரா மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 168 கிமீ தூரத்தை 40 மணி நேரத்தில் கடந்தார்.
சீனாவின் தைஷானில் நடைபெற்ற சர்வதேச மலையேற்ற போட்டியில் கலந்து கொண்டு 27 வது இடத்தை வாங்லாங் பிடித்துள்ளார்.
மூச்சுக் காற்று மூலம் ஒருவருக்கு கரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியும் கருவிக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த கருவிக்கு ‘பிரீபென்ஸ்கோ’ என பெயரிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தின் 3 மாணவர்கள், இந்தியப் பேராசிரியர் அடங்கிய குழு கண்டுபிடித்த இந்த கருவி மூலம் ஒருவருக்கு கரோனா தொற்று இருக்கிறாத என்பதை ஒரு நிமிடத்துக்குள் கண்டுபிடிக்க முடியும்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தின் ப்ரீத்தா நிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தை, சேர்ந்த இந்தியப் பேராசிரியர் டி வெங்கி வெங்கடேசன், அவரின் மாணவர்கள் டாக்டர் ஜியா ஹீனன், டுஃபாங், வேனே வீ ஆகியோர் இந்த பிரீத்தா நிக்ஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த ‘பிரீபென்ஸ்கோ’ கருவியில் இருக்கும் சிறிய குழாயை பரிசோதனைக்கு உட்படுபவர் வாயில் வைத்து மூச்சுக்காற்றை அழுத்தமாக செலுத்த வேண்டும்.
அவரின் மூச்சுக்காற்று இந்த கருவியில் சேமிக்கப்பட்டு, ஸ்பெக்டோ மீட்டர் அடுத்த சில வினாடிகளில் மூச்சுக் காற்றில் கரோனா வைரஸ் கிருமி இருக்கிறதா அதாவது பாசிட்டிவா அல்லது நெகட்டிவாRead More…
ஐ.நா பொதுச் செயலாளராக அன்டோனியா குட்டெரெஸ் மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐ.நா வின் 9-வது பொதுச் செயலாளரான அன்டோனியா குட்டெரஸ் 2017. ஜனவரி 1 முதல் 5 ஆண்டுகளாக அந்தப்பதவியில் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் டிசம்பர் 31 ம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போதைய நிலையில் ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளராக குட்டெரஸ் மட்டுமே உள்ளார்.
போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான குட்டெரெஸ் 2005 முதல் 10 ஆண்டுகள் அகதிகளுக்கான ஐ.நா தூதராக பணியாற்றியுள்ளார்.
உறுப்பு நாடுகளிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் எந்தவொரு நபரும் ஐ.நா பொதுச் செயலாளராக 2 வது முறையும் தேர்வாகலாம்.
ஐ.நா பொதுச்செயலாளர் நியமனமானது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரையின் பேரில் ஐ.நா பொதுச் சபையால் மேற்கொள்ளப்படுகிறது.
கொலினெட் மாகோசோ காங்கோ குடியரசின் புதிய பிரதமராக நியமிக்கபட்டார். கிளமென்ட் மோம்போவுக்கு பதிலாக இப்பதவியில் நியமிக்கபடுகிறது. மாகோசோ மத்திய ஆப்ரிக்க நாட்டின் கல்வி அமைச்சராக இருந்தார். 2011-16 வரை இளைஞர் மற்றும் குடிமை அறிவுறுத்தல் அமைச்சராக இருந்தார். 2016 முதல் கல்வியறிவு பொறுப்பில் தொடக்க மற்றும் இடைநிலை கல்வியமைச்சர் பதவியை வகித்துள்ளார்.
இஸ்ரேலின் அடுத்த மொசாட் உளவு அமைப்பின் தலைவராக டேவிட் பார்னியா நியமிக்கப்பட்டார். யோசி கோஹனுக்கு பதிலாக இப்பதவியில் டேவிட் பார்னியா நியமிக்கப்பட்டார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டின் உளவு நிறுவனமான மொசாட்டின் புதிய தலைவராக டேவிட் பார்னியாவை நியமித்தார். கோஹன் 2016 ல் பதவியேற்றதிலிருந்து இஸ்ரேலில் ஸ்பைRead More…
சந்திரனில் தண்ணீரைத் தேடுவதற்காக நாசா தனது முதல் மொபைல் ரோபோவை 2023 ல் அனுப்ப திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் 2023 ல் நிலவில் நீர் மற்றும் பிற வளங்களை தேட திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனம், தனது ஆர்ட்டேமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக சந்திர மேற்பரப்பில் மற்றும் அதற்கு கீழே பனி மற்றும் பிற வளங்களை தேடி 2023 ன் பிற்பகுதியில் தனது முதல் மொபைல் ரோபோவை சந்திரனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.துருவ ஆய்வு ரோவர் அல்லது VIPER புலனாய்வு செய்யும் சந்திர தென் துருவத்தில் நாசா வரைபட வளங்களுக்கு உதவும் தரவுகளை சேகரிக்கும்.
VIPER இலிருந்து பெறப்பட்ட தரவு, சந்திரனில் துல்லியமான இடங்களையும் பனியின் செறிவுகளையும் தீர்மானிக்க நமது விஞ்ஞானிகளுக்கு உதவும் ஆற்றலை கொண்டுள்ளது மற்றும் ஆர்ட்டெமிஸ் விண்வெளி வீரர்களுக்கான தயாரிப்பில் சந்திர தென் துருவத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சாத்தியமான வளங்களை மதிப்பீடு செய்ய உதவும்.
தேசிய செய்திகள்
இந்தியாவில் பரவி வரும் கரோனா வைரஸ்க்கு எதிராக நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை ரோச் இந்தியா மருந்து நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
‘கேஸிர்விர்மாப்’, ‘இம்டெவிமாப்’ ஆகிய இரு பெயர்களில் இந்த மருந்தை ரோச் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்த போது அவருக்கு இந்த ஆன்டிபாடி காக்டெயில் மருந்துதான் செலுத்தப்பட்டது.
ஒவ்வொரு மருந்தும் 600 மிகி எடை கொண்டது. ஒவ்வொரு மருந்தின் விலையும் ரூ.59,570 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு இந்தியாவில் அவசர காலத்துக்கு பயன்படுத்தி கொள்ள அனுமதியளித்துள்ளது.
இந்த ஆன்டிபாடி காக்டெயில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கரோனாவில் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், வயதில் மூத்தவர்களுக்கும், உடல் எடை 40 கிலோவுக்கு குறைவாக
இருப்போருக்கும் செலுத்தலாம்.
கேரள சட்டப் பேரவைத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி.ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதல் முறையாக எம்.எல்.ஏ வாகியுள்ள ராஜேஷ் ஏற்கனவே 10 ஆண்டுகள் எம்.பி.யாக பதவி வகித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக எம்.எல்.ஏ வான ஒருவர் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதுRead More…
‘குளோபல் பாண்டெமிக் ரேடார்’ திட்டத்தை இங்கிலாந்து அறிமுகப்படுத்துகிறது.
வளர்ந்து வரும் கோவிட்-19 வகைகளை அடையாளம் காணவும் உலகம் முழுவதும் புதிய நோய்களை கண்டறியவும் “குளோபல் பாண்டெமிக் ரேடார்’ திட்டங்களை இங்கிலாந்து அரசு தொடங்கியுள்ளது.
குளோபல் பாண்டெமிக் ரேடார் 2021 இறுதிக்குள் முழுமையாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.
சீனாவின் ‘கலப்பின அரிசியின் தந்தை’ யுவான் லாங்பிங் மே 22 ல் காலமானார்.
1930 ம் ஆண்டில் பெய்ஜிங்கில் பிறந்தார்
1973 ல் ஆண்டில் அதிக மகசூல் கொண்ட கலப்பின நெல் விகாரத்தை வளர்ப்பதில் வெற்றி பெற்றார்.
சீன தானிய விஞ்ஞானி யுவான் லாங்பிங் நாட்டில் தானிய உற்பத்தியை பெரிதும் மேம்படுத்திய ஒரு கலப்பின அரிசி விகாரத்தை உருவாக்கியதில் புகழ் பெற்றவர்.
2004 ல் யுவானுக்கு உலக உணவு பரிசு வழங்கப்பட்டது.
சீனாவின் உணவு பாதுகாப்பு மற்றும் வேளாண்மையின் விஞ்ஞான வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்புக்காகவும், உலகின் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும் 2019 ல் சீனாவின் மிக உயர்ந்த குடியரசின் பதக்கம் யுவானுக்கு வழங்கப்பட்டது.
தேசிய செய்திகள்
இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி உயிரிழந்தார்.
பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் தனது பணியை தொடங்கி பின்னர் அந்த மையத்தின் இயக்குனர் என்ற உயரிய பொறுப்பை எட்டினார்.
2010 ம் ஆண்டு வரை 6 ஆண்டுகளுக்கு பாபா அணுசக்தி ஆய்வு மைய இயக்குநராக இருந்த அவர், அணு சக்தி ஆணையத்தின் தலைவரானார்.
மார்த்தா கூம் கென்யாவின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆகிறார்.
61 வயதான கூம் 33 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் சட்ட நடைமுறையிலும் நீதித்துறை உறுப்பினராகவும் பணியாற்றினார்.
கென்யா ஜனாதிபதி உஹீரு கென்யாட்டா மார்த்தா கூமை கிழக்கு ஆப்ரிக்க நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாகவும் நீதித்துறை தலைவராகவும் நியமித்துள்ளார்.
நைரோபி நாட்டின் புதிய அரசியலமைப்பு ஆகஸ்ட் 27, 2010 முதல் நடைமுறைக்கு வந்ததிலிருந்து அவர் நாட்டின் 3வது தலைமை நீதிபதி ஆகிறார்.
நேபாளத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து 6 மாதங்களில் புதிய தேர்தலுக்கு குடியரசுத்தலைவர் வித்யாதேவி பண்டாரி உத்தரவிட்டுள்ளார்.
நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிரதமர் சர்மா ஓலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாஹா இடையே மோதல் அதிகரித்தது.
அரசியல் குழப்பம் அதிகரித்த நிலையில் நாடாளுமன்றத்தில் அண்மையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பிரதமர் சர்மா ஓலி அரசு தோல்வியடைந்தது.
அதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியை சர்மா ஓலி ராஜிநாமா செய்தார்.
புதிய ஆட்சியமைக்க எதிர் கட்சியான நேபாள காங்கிரஸ் முயற்சித்தது. அந்த கட்சியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
இதையடுத்து பிரதமராக சர்மா ஓலி மீண்டும் மே 14ம் தேதி பதவியேற்றார். அவர் 30 நாள்களுக்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அதிபர் உத்தரவிட்டார். பெரும்பான்மையை நிரூபிக்க சர்மா ஓலிக்கு 136 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான மீண்டுமொரு வாக்கெடுப்பை நடத்த பிரதமர் விரும்பவில்லை.
இந்நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து ஆறு மாதங்களில் புதிய தேர்தல் நடத்த குடியரசுத்தலைவர் வித்யா தேவிபண்டாரி உத்தரவிட்டார்.
நேபாள நாடாளுமன்றத்துக்கு நவம்பர் 12, 18 ஆகிய தேதிகளில் 2ம் கட்டமாக தேர்தல் நடைபெறும்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து ‘யாஸ்’ புயலாக மாறவுள்ளது. இந்த புயலுக்கு ஓமன் நாடு ‘யாஸ்’ என பெயரிட்டுள்ளது.
மே 23 ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்தது. அந்தமான் தீவுகள் போர்ட் பிளேயருக்கு வடக்கு – வடமேற்கே 560 கிமீ தொலைவிலும், ஒடிஸா மாநிலம் பாரதீபிற்கு
கிழக்கு – தென்கிழக்கே 590 கிமீ தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மே 24 ல் புயலாக மாறுகிறது. இந்த புயல் ஒடிஸா – மேற்குவங்கம் இடையே பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கரையைக்Read More…
Martha Koome appointed Kenya’s first woman chief justice
Kenyan President Uhuru Kenyatta has appointed Court of Appeal Judge Martha Koome as the East African country’s first woman chief justice and head of the judiciary.
She replaces David Maraga,She is the first woman to head any of the three branches of government. About Martha Koome.
She founded and headed the Federation of Women Lawyers which is an organization dedicated to campaign and advocates for women’s rights and offer free legal aid to poor women. The organization played an important role in the drafting of the new constitution in 2010.
Martha Koome is the 3rd chief justice since the new constitution drafted.
Nairobi – Capital of Kenya
Nepal President orders to dissolves parliament
Nepal President Bidhya Devi Bhandari dissolved the parliament on Friday midnight and ordered fresh polls in six months.
The decision was made on the recommendation of theCabinet headed by caretaker Prime Minister KP Oli. the elections will take place between November 12 and 18.
Reason for the Dissolution The dissolution of the parliament comes after Oli’s claim to form the government had to be dropped by the President on legal advice. Oli was recently appointed as Prime Minister after the opposition parties, led by Nepali congress leader Sher Bahadur Deuja, were unable to put together a coalition government.
Protest The opposition parties, including Nepali Congress, Maoist Party, a section of the Samajbadi Janata party, and dissidents from the Oli’s Communist Party of Nepal – unified Marxist/Leninist, had warned that they would launch widespread protests if the President violated the constitution and retained Oli.
Cyclone Yaas Hits North Odisha, Bengal On High Alert
Cyclone Yaas crossed the north Odisha coast about 20 km south of Balasore between 10.30 and 11 am, with 130-140 km per hour winds.
Over 10 lakh people have been relocated to storm shelters in Odisha and West Bengal. While other states such as Andhra Pradesh, Tamil Nadu and Andaman and Nicobar islands have also put a contingency plan in action, it is Odisha that is likely to be at the centre of the devastating storm.