- கொரோனா தடுப்பு பணிக்கு மேலும் 2570 செவிலியர்களை பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவு
- கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணியில் 2323 செவிலியர்கள் ஏற்கனவே பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
- இதனை தொடர்ந்து 6 மாத காலங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2570 செவிலியர்களை பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
Get More Info
- செவிலியர்கள் ஆணை கிடைக்கப்பெற்ற மூன்று தினங்களுக்குள் பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்களும் தாலுக்கா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்களுக்கும் பணியமர்த்தப்படுவார்கள்.
- இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும்.