ஏப்ரல் 22ம் தேதி – ஒற்றுமை தினம்

  • கரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் மருத்துவர்கள் உட்பட அனைத்து களப்பணியாளர்களுக்காக தொழிலாளர்கள ஏப்ரல் 22ம் தேதி ஒற்றுமை தினத்தை கடைபிடிக்க வேண்டும் என பிஎம்எஸ் தொழிற்சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.
    • இது குறித்து பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கா.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் 22ம் தேதி மாலை 04.00 மணிக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும்.
    • பின்னர் கரோனாவை கட்டுப்படுத்த உழைத்து வரும் பணியாளர்களுக்கு மரியாதை மற்றும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
    • செய்தி துளிகள்:
      • இதில் மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், வங்கி ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் உட்பட அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியில் உள்ளவர்கள் அடங்குவர்.